குப்பைத் தொட்டியில் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைப்பு

Date:

கொம்பனித்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்த 20 வயது இளைஞர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடையொன்றில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு காசாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிராக வணிக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் இரண்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த புகைப்படம் தொடர்பில் கொம்பனித்தெரு காவல் துறைக்கு தகவல் கிடைத்த பின்னர் சிசிடிவி துணையுடன் ஸ்டிக்கர் ஒட்டிய நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

22 ஆம் திகதி காலை குறித்த இளைஞன் தனது பணியிடத்திற்கு வரும்போது அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவும் அரசப் புலனாய்வு பிரிவும் அங்கிருந்துள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ள அவர் தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...