இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரவின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 முதல் 4 ஆம் திகதிகளில் தாய்லாந்தின் பேங்கொக்கிற்கு விஜயம் மேற்கொள்வார். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 4 முதல் 6 திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தில் பங்கேற்க உள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...