ஞாயிறன்று உலகின் எப்பாகத்திலும் பெருநாள் வருவதற்கான சாத்தியம் இல்லை..!

Date:

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மார்ச் 29 சனிக்கிழமை அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் எப்பாகத்திலும் தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அபுதாபியை தளமாகக் கொண்ட  சர்வதேச வானிலை மையம் (IAC) தெரிவித்துள்ளது

அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்படுவதால் சந்திரன், சூரியன் மறைய முன்னரே மறைந்துவிடும் என அது தெரிவித்துள்ளது.

வெற்றுக் கண்ணாலோ டெலஸ்கோப்பினாலே (Telescope) அல்லது வேறு எந்த வழியிலோ அன்றையதினம் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சவூதியின் வானியல் ஆய்வாளர் பத்ர் அல் உமைரா அவர்களும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெரும்பாலான அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் ரமழான் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 31 ஆம் திகதி திங்கட்கிழமையே பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலைப்பிறை பார்க்கும் மாநாடு நடைபெறவிருப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அன்று பிறை தென்பட்டால் உலக நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பெருநாள் கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...