முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தினம்: நினைவுகளை மீட்டெடுக்கும் புத்தளம் மரிக்காரின் அர்த்தமுள்ள கவிதை

Date:

இலங்கையில் COVID-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்ட தினம் நாளை மார்ச் 31 ஆகும்.

அந்த வேதனையான தினத்தை நினைவுகூரும் வகையில், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் எழுதிய அர்த்தமுள்ள கவிதையை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

அந்த வேதனையான நாட்கள் இன்றும் மனங்களில் அழியாத வலியாக நிற்கின்றன. மண்ணுக்கு அர்ப்பணிக்க முடியாமல், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சோதனைகளை கவிஞர் தனது வரிகளில் பதிவு செய்துள்ளார்.

நினைவு கீதம்..!
5 ஆண்டு நிறைவு கீதம்..!!

—-
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
###
விதிகளை மாற்றினாய்…
விஞ்ஞானத்தை
கொழுத்தினாய்…
பிறந்த பிஞ்சுகளை
பற்றவைதாய்…
உரிமைகளின்
குரல்வளை கடித்தாய்…!!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
குருதி கொதித்த நாள்…!
எம் கூட்டை சிதைத்த நாள்…!
கட்டாயத் தகனத்தில்…
இலங்கை வரலாறே எரிந்த நாள்…
துஆ செய்ய… தாயின்
சாம்பலை தேடும் நாள்..
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
நஞ்சைப் பார்த்தோம்…!
சூரியனே நெஞ்சில் சுட்ட
சூடு உணர்ந்தோம்…!
ஆயிரம் ஆண்டு…
அமைதிச் சமூகம்…
தீயிற்கு
தின்னக் கொடுக்கப்பட்டோம்..!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
——–
காலத்தால்…
நிகழ்வுகள் மறந்துபோகலாம்…
நிஜங்கள் புதைந்து போகக்கூடாது…!
வலிகளை நினைவுகூர்வோம்…
இனியேனும் நிகழாதிருக்க…!
இந்த வரலாற்றை பதிவுசெய்வோம்…!!
—-
எழுத்து இயக்கம்,
புத்தளம் மரிக்கார்.
30-03-2025

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...