முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தினம்: நினைவுகளை மீட்டெடுக்கும் புத்தளம் மரிக்காரின் அர்த்தமுள்ள கவிதை

Date:

இலங்கையில் COVID-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்ட தினம் நாளை மார்ச் 31 ஆகும்.

அந்த வேதனையான தினத்தை நினைவுகூரும் வகையில், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் எழுதிய அர்த்தமுள்ள கவிதையை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

அந்த வேதனையான நாட்கள் இன்றும் மனங்களில் அழியாத வலியாக நிற்கின்றன. மண்ணுக்கு அர்ப்பணிக்க முடியாமல், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சோதனைகளை கவிஞர் தனது வரிகளில் பதிவு செய்துள்ளார்.

நினைவு கீதம்..!
5 ஆண்டு நிறைவு கீதம்..!!

—-
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
###
விதிகளை மாற்றினாய்…
விஞ்ஞானத்தை
கொழுத்தினாய்…
பிறந்த பிஞ்சுகளை
பற்றவைதாய்…
உரிமைகளின்
குரல்வளை கடித்தாய்…!!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
குருதி கொதித்த நாள்…!
எம் கூட்டை சிதைத்த நாள்…!
கட்டாயத் தகனத்தில்…
இலங்கை வரலாறே எரிந்த நாள்…
துஆ செய்ய… தாயின்
சாம்பலை தேடும் நாள்..
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
எம் மரணத்தை
எரித்த அவமானம்…!
###
நஞ்சைப் பார்த்தோம்…!
சூரியனே நெஞ்சில் சுட்ட
சூடு உணர்ந்தோம்…!
ஆயிரம் ஆண்டு…
அமைதிச் சமூகம்…
தீயிற்கு
தின்னக் கொடுக்கப்பட்டோம்..!
###
நெருப்பில் குளித்த
அடையாளம்…
மரணத்தை
எரித்த அவமானம்…!
கருப்பு அதிகாரம்…
நீதியின் நிர்வாணம்…
சடலத்தில் செய்த இனவாதம்…!
——–
காலத்தால்…
நிகழ்வுகள் மறந்துபோகலாம்…
நிஜங்கள் புதைந்து போகக்கூடாது…!
வலிகளை நினைவுகூர்வோம்…
இனியேனும் நிகழாதிருக்க…!
இந்த வரலாற்றை பதிவுசெய்வோம்…!!
—-
எழுத்து இயக்கம்,
புத்தளம் மரிக்கார்.
30-03-2025

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...