உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இன்றும் நாளையும் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்..!

Date:

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இன்றும் நாளையும் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

கடந்த ஒரு மாதம் காலம் நோன்பிருந்த முஸ்லிம்கள் நோன்பை முடித்துக்கொள்ளும் வகையில் நோன்பு பெருநாளைக்கான பிறையை தீர்மானித்து அதன் பிரகாரம் பெருநாளை கொண்டாடுவதே அவர்களின் மரபாகும்.

அந்தவகையில் இன்றை தினமும் நாளைய தினமும் உலகின் பல்வேறு பாகங்களிலும் பெருநாள் கொண்டாடப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளமுடியும்.

அந்தவையில் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், யெமன், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் இன்றைய தினம் பெருநாளை கொண்டுகின்றன.

அதேவேளை எகிப்து, சிரியா, அல்ஜீரியா, ஓமான், ஈராக், லிபியா, துனிசியா, ஜோர்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் திங்கட்கிழமை பெருநாளை கொண்டாடவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதேவேளை இலங்கை முஸ்லிம்களும் இன்றைய தினம் (30) பெருநாளை தீர்மானப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் பிறை பார்க்க ஒன்றுகூடவுள்ளனர். அதனைத்தொடர்ந்து பெருநாள் தீர்மானிக்கபடவிருக்கின்றது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...