நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை நிதியுதவி

Date:

நிலநடுக்கத்தால்  பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை மற்றும் மல்வத்து – அஸ்கிரிய பீடம் ஆகியவை இணைந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளன.

இந்த நன்கொடை, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் மற்றும் ஸ்ரீ தலாதா மாளிகையின் மதிப்பிற்குரிய தியவதன நிலமே ஆகியோரால் இலங்கையில் உள்ள மியன்மார் தூதரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால்  உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும், மியன்மார் மக்களின் நல்வாழ்வு மற்றும் மீளெழுச்சிக்கு பிரார்த்தனை செய்யும் வகையிலும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட வழிபாடுகள் புதன்கிழமை (02) நடைபெற்றன.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அநுநாயக்க தேரர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கத்தினருடன், புனித தந்த தாதுவுக்கு அருகில் ஒன்றுகூடி பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.

“ஆழமாக வேரூன்றிய தேரவாத பௌத்த பாரம்பரியத்தைக் கொண்ட நாடான மியன்மாருடன் இலங்கை நீண்டகால மற்றும் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது.

இந்தப் பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை மற்றும் மல்வத்து – அஸ்கிரி பீடம் ஆகியவை  இணைந்து 1.5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளன” என ஸ்ரீ தலாதா மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...