முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு பிணை!

Date:

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபரை ரூ.10 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதி செய்ததாக தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ​மாத்தறை நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்ய பிடியாணை பிறப்பித்ததோடு வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்தது.

அதன் பின்னர், 2025 மார்ச் 20ஆம் திகதி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, தொடர்ச்சியாக இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். ​

சம்பவம் தொடர்பில் போகம்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையில் அவருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...