உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே 05, 06 பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05, 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் பாடசாலைகளை மே 04ஆம் திகதி அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மேசைகள், கதிரைகள், பாடசாலை மண்டபங்களுக்குள் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் மே 06ஆம் திகதி நாடு முழுவதும் (ஒரு சில சபைகளைத் தவிர) உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, மே 07 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...