‘நாய்களும் முஸ்லிம்களும் உள்ளே நுழைய அனுமதியில்லை’: இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள வெறுப்புணர்வு சுவரொட்டி

Date:

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தலைசிறந்த வேளாண்மைக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான பிதான் சந்திர கிருஷி விஸ்வவித்யாலயாவின் வேளாண்மைப் பீடத்தின் நுழைவாயில் அறிவிப்புப் பலகையில் இஸ்லாமிய வெறுப்பையும், தரக்குறைவான கருத்துகளையும் தாங்கிய ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘நாய்கள் மற்றும் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைவரின் பார்வையும் பஹல்காம் மீதுதான். பயங்கரவாதம் என்பது இஸ்லாம்.’ இந்த தகவலை மாக்தூப் ஊடகம் உறுதி செய்துள்ளது.‌

பெயர் எதுவும் குறிப்பிடப்படாத காரணத்தால், இந்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர்களாலோ அல்லது பணியாளர்களாலோ கண்டறிய முடியவில்லை.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது 26 பேர் கொல்லப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல மூலைகளிலும் பரவலான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் இந்தியா முழுவதிலுமிருந்து வந்த பல சுற்றுலாப் பயணிகள் இரண்டு வெளிநாட்டினர் மற்றும் ஒரு உள்ளூர் இளைஞர் அடங்குவர். இரு நாடுகளுக்கும் இடையே இப்போது நிலைமை பதற்றமாக உள்ளது.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...