இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாக்களிக்க வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அவரது வலது முழங்காலில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கோட்டாபய ராஜபக்சவும் மைத்ரிபால சிறிசேனவும் வேறு சில தனிப்பட்ட காரணங்களால் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வாக்களித்தனர்.