கடல் கடந்தும் இலங்கை மக்களுக்காக சேவை செய்த செய்யித் ஹமீத் மௌலானா மறைந்தார்

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அரை நூற்றாண்டு காலமாக இருந்து இலங்கை மக்களுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் தொண்டாற்றிய செய்யித் ஹமீத் மௌலானா தனது 91 ஆவது வயதில் நேற்றிரவு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

1975 இல் ரியாதில் கால் பதித்த இவர், ஹோட்டல் விநியோகங்களுக்கென தனியான கம்பெனி ஒன்றை நிறுவி ரியாதின் பெரும் வர்த்தகப் புள்ளியாக மாறினார்.

ஐந்து தசாப்தங்களாக சவூதிக்காக நியமிமிக்கப்படும் அனைத்து இலங்கைத் தூதுவர்களுடனும் இணைந்து தனது செல்வத்தின் மூலமும் செல்வாக்கின் மூலமும் இலங்கையருக்கு பெரும் தொண்டாற்றினார்.

தனது X தளத்தில் இலங்கை பற்றிய செய்திகளைப் பரிமாறி வந்த இவர் பல்வேறு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட செய்யித் ஹமீத் மௌலானா முன்னாள் மேல் மாகாண ஆளுநர் செய்யித் அலவி மௌலானாவின் மருமகனுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ரியாதில் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...