இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலில் மனிதநேய பணியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர்: IHH துருக்கி நிவாரண அமைப்பு கண்டனம்

Date:

காசா நகரத்தில் உள்ள அல்-நஃபாக் பகுதியில் துருக்கி இஸ்தான்புல்லை தலைமையிடமாகக் கொண்ட  IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளையின் திட்ட பணிப்பாளர் முகமது அல்-மபாயீத் கொல்லப்பட்டார்.

உலக உணவுத் திட்டத்துடன் IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை இணைந்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்றபோது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து மனிதநேய பணியாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா திட்டத்தில் பணிபுரியும் மனிதநேய பணியாளர்களான முகமது அல்-முபாயித், அகமது போஸ்டன், மொட்டாஸ் ரஜாப், இஷாக் அல்-தாயிஃப் மற்றும் ஜமால் அல்-மபாயீத், தாக்குதல்களில் கொல்லப்பட்டதுடன் இருவர் கடுமையாக காயமடைந்ததாக IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசாவில் பலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்குவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மனிதாபிமான ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ‘கொடூரமான தாக்குதல்’ எனவும் ‘கடவுள் தியாகிகள் மீது கருணை காட்டட்டும், அவர்களின் குடும்பங்களுக்கும் பொறுமையை வழங்கட்டும் எனவும் IHH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...