இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலில் மனிதநேய பணியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர்: IHH துருக்கி நிவாரண அமைப்பு கண்டனம்

Date:

காசா நகரத்தில் உள்ள அல்-நஃபாக் பகுதியில் துருக்கி இஸ்தான்புல்லை தலைமையிடமாகக் கொண்ட  IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளையின் திட்ட பணிப்பாளர் முகமது அல்-மபாயீத் கொல்லப்பட்டார்.

உலக உணவுத் திட்டத்துடன் IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை இணைந்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்றபோது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து மனிதநேய பணியாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா திட்டத்தில் பணிபுரியும் மனிதநேய பணியாளர்களான முகமது அல்-முபாயித், அகமது போஸ்டன், மொட்டாஸ் ரஜாப், இஷாக் அல்-தாயிஃப் மற்றும் ஜமால் அல்-மபாயீத், தாக்குதல்களில் கொல்லப்பட்டதுடன் இருவர் கடுமையாக காயமடைந்ததாக IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசாவில் பலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்குவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மனிதாபிமான ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ‘கொடூரமான தாக்குதல்’ எனவும் ‘கடவுள் தியாகிகள் மீது கருணை காட்டட்டும், அவர்களின் குடும்பங்களுக்கும் பொறுமையை வழங்கட்டும் எனவும் IHH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...