தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினராகிறார் சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர்!

Date:

முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபைக்கு இறகுச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டது.

இந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர் கட்சியினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் தெஹிவளை, கல்கிஸ்ஸை மற்றும் ரத்மலான பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ஒரே அணி இறகுகள் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் செயற்திட்டத்தினை அடிப்படையாக வைத்து மாநகர சபை அமர்வுகளில் சமூக நீதிக் கட்சி பல முன்மொழிவுகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் பிரச்சாரங்களிலும், விஞ்ஞாபனத்துக்கான கொள்கை வகுப்பதிலும் முன் நின்று செயற்பட்ட சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி இறுதி இரண்டு வருடங்களும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையை அலங்கரிப்பார் என்று கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...