பேராதனை பல்கலையில் நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

Date:

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க  மண்டபத்தில் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த ஆய்வு மாநாடு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பல்வேறு துறை சார் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழியல் ஆய்வை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டின் முதலாவது அமர்வில் வரலாற்று ஆய்வாளர், நூல் திறனாய்வாளருமான சிராஜ் மஷ்ஹூர் ‘தமிழின் பன்மைத்துவத்தில் ‘இஸ்லாமியத் தமிழின்’ வகிபாகம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கவுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...