டெங்கு, சிக்குன்குன்யா நேய்களை கண்டறிய மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்!

Date:

அறிகுறிகள் மூலம்,  டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாதுயெனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபதிரன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிக்குன்குன்யா மற்றும் டெங்கு காய்ச்சலின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஒரே விதமாகவே காணப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் வாந்தி போன்றவை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை சந்தித்து உரிய சிகிச்சைப்பெற வேண்டுமெனவும் மேலும், சிக்குன்குன்யா நோய் பெரும்பாலும் உடல் வலியை ஏற்படுத்துவதால், வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையானதாக அமையும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள வைத்திய நிபுணர், காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க முடிந்தவரை பெரசிட்டமோல் மாத்திரைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தண்ணீர், பழச்சாறு, கஞ்சி, ஜீவனி போன்றவற்றை அருந்துவதன் ஊடாக, நீரிழப்பைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிகுறிகள் தோன்றினால், அது டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாது எனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், சில நோயாளிகள் நீண்டகால மூட்டு வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பதால், இதற்கு முறையான சிகிச்சை தேவை என்றும், எனவே வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம் எனவும் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபதிரன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...