உடுதும்பர பிரதேச சபையிலும் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி

Date:

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.

வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற உடுதும்பர பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் விபுல பண்டார சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடுதும்பர பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் தலா 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே நேற்று பிரதேச சபைத் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அக்குரணை பிரதேச சபை மற்றும் கடுகண்ணாவை நகர சபை என்பவற்றிலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...