கொலன்னாவை நகர சபையில் குழப்பம்: சுசில் குமாரவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநீக்கம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று கொலன்னாவ நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுசில் குமாரவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொலன்னாவை நகரசபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமிப்பதில் கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்க கட்சி செயல்படத் தவறியதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் பதவி உடனடியாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) காலை முதன்முறையாகக் கூடிய கொலன்னாவ நகரசபையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த நபர் மட்டுமே சபையில் இருந்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்.

இதன் விளைவாக கொலன்னாவை நகரசபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றது.

அந்த நேரத்தில், கொலன்னாவை நகர சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் தம்மிக்க விஜயமுனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே நேரத்தில் சமன் செனவிரத்ன துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...