16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும்

Date:

எதிர்வரும் ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை 16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  அறிவித்துள்ளது.

 

தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் நுளம்பு பரவல் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்த சமூக நிபுணர் வைத்தியர் பிரிசில்லா சமரவீர குறிப்பிட்டார்.

 

இதற்கு அமைவாக, 16 மாவட்டங்களில் உள்ள 111 சுகாதார மருத்துவ பிரிவுகளில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும்.

இதன்போது அதிக ஆபத்துள்ள நுளம்பு பெருகும் பகுதிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், சுற்றுச் சூழல் தொடர்பில் கவனக்குறைவாக செயற்படும் நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 26,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.டெங்கு நோயாளிகளில் 45% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...