போர்ச் சூழல் காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பிறிதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Date:

ஈரானில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பிறிதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால், ராஷ்ட் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

+989392055161 / +989912057522 / +989366360260 ஆகிய தொடர்பு இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் slembiran@yahoo.com என்ற முன்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என்றும் வௌிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, ஈரானை விட்டு வெளியேற விரும்பும் அல்லது உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையரும் மேற்கண்ட முகவரிக்கோ, தொலைபேசி, மின்னஞ்சலுக்கோ தொடர்பு கொள்ள முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...