கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: முன்னாள் அமைச்சரின் செயலாளர் காயம்

Date:

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார  என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த போதிலும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, என்பதுடன் கந்தானை பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

இருவரும் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...