வக்ப் நடைமுறைகளை பேணி நிர்வாகத்தெரிவு நடத்துமாறும் கணக்கறிக்கைகளை உடன் சமர்ப்பிக்குமாறும் கோரி முஸ்லிம் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு சுற்றறிக்கை

Date:

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நம்­பிக்­கை­யா­ளர்­களை தெரிவு செய்தல் மற்றும் கணக்­க­றிக்­கை­களை சமர்ப்­பித்தல் தொடர்பில் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்­பாக அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்­களின் பதவிக் காலம் முடி­வ­டைந்­த­வர்­களும் குறிப்­பாக விஷேட நம்­பிக்­கை­யா­ளர்­களின் பதவிக் காலம் முடி­வ­டைந்­த­வர்­களும் மிக விரை­வாக புதிய நிரு­வாகத் தெரிவை தெரிவு செய்­வ­தற்­கான ஆயத்­தங்­களை மேற்­கொள்­வ­துடன் வக்ப் சட்ட நடை­மு­றை­களைப் பேணியும் பள்­ளி­வா­சல்­களின் யாப்பைப் பேணியும் செய்­யு­மாறு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய நிரு­வாகத் தெரிவை செய்­வ­தற்கு தயா­ராகும் பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் அப்­பி­ர­தேச கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் தொடர்பு கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மேலும் வரு­டாந்த கணக்­க­றிக்­கை­களை சமர்ப்­பிக்­காத பள்­ளி­வா­சல்கள், சமர்ப்­பிக்­காத வரு­டங்கள் அனைத்­திற்கும் தனித்­த­னி­யாக திணைக்­கள இணையத்தளத்தில் (Web: w.w.w.muslimaffairs.gov.lk) இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...