‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’நூல் வெளியீட்டு விழா!

Date:

‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 04:00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அஸ்ஷேக் எம்.டி.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.சி.ஏ நசார் ((PhD), MCPM, LLB Senior Lecturer, South Eastern University of Sri Lanka) பங்கேற்கவுள்ளார்.

நிகழ்வின் முதன்மை உரையை  பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (PhD) அவர்களும் நூல் மதிப்புரையை  ஃபாத்திஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர்  ரவூஃப் ஜெயின்(PhD)அவர்களும்  நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல், கல்குடா பிரதேச முஸ்லிம் சமுதாயத்தின் சமூக, கலாச்சார, வரலாற்று பின்புலத்தையும், அந்த சமூகத்தின் அழிவுகள், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றையும் ஆழமாகப் பதிவு செய்யும் முக்கியமான விழாவாக இருக்கப்போகிறது.

அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...