ஒக்டோபர் முதல் டிஜிட்டல் சேவைகளுக்காக வரி அறவிட தீர்மானம்

Date:

அக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகள் வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18 ஆம் தேதி வரை வரிக்கு உட்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த புதிய டிஜிட்டல் சேவை வரி தொடர்பான வழிகாட்டுதல்களை 2025 ஜூலை மாதம் முதல் தேதி 2443/30 இலக்க விசேட வர்த்தமானி மூலமாக வெளியிட்டிருந்தது.

இலங்கையில் உள்ள நபர் ஒருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினரும் இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் வற் வரிக்கு பதிவு செய்வது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வரி விதிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...