மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை – கடல் கடந்து அங்கீகரிக்கப்பட்ட தமிழ் சேவை!

Date:

தமிழுக்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய சேவை இன்று கடல் கடந்து உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளதை, மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உலகின் மிகச் சிறந்த மற்றும் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில், இந்திய ஆய்வியல் துறையின் கீழ் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வு இருக்கை ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, மலேசிய இஸ்லாமிய அறவாரியம் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகடமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளமை, தமிழருக்கே ஒரு பெருமையாகும்.

“தமிழனின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கிய கவிக்கோ அப்துல் ரஹ்மான், தமிழ் இலக்கியத்தின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளார்.
படைப்புக்கும் படைப்பாளிக்கும் மரணம் இல்லை என்பதற்கான உன்னத சான்று இன்றைய நிகழ்வே. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை,” என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, தமிழ் மொழிக்கும், இலக்கிய வரலாற்றுக்கும் புதிய அடையாளம் சேர்த்துள்ளதோடு, கவிக்கோவின் சேவையை உலகிற்கு உணர்த்திய முக்கிய கட்டமாகவும் அமைகிறது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...