சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

Date:

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர் நடத்தி வரும்  “சபாத் இல்லத்தை” உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது (கன்னி) அமர்வில், தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்ததுடன், சபாத் இல்லத்தினை எதிர்த்து ஒருமனதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு சபை முடிவில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்போது பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கும் மதசார்பற்ற துறையிற்கும் முரணான இத்தகைய அமைப்புகள் எதிர்கொள்ளப்பட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அரசே அறுகம்பை சபாத் இல்லத்தை உடன் அகற்று, இலங்கை அடுத்த பலஸ்தீனா?, இஸ்ரேலின் அடுத்த கொலனியாக இலங்கையை ஆக்க இடமளிக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...