நியூயார்க் மான்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை: தன்னைத்தானே சுட்டு கொலையாளியும் தற்கொலை!

Date:

நியூயார்க் மாகாணத்தில் பொலிஸ்  அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் 44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை அணிந்துவந்து சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் BMW காரில் வந்த ஒருவர் தனது கையில் M14 துப்பாக்கியுடன் வணிக வளாகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.

ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நெவாடாவைச் சேர்ந்த ஷேன் டமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...