அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம்!

Date:

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்று வெள்ளிக்கிழமை (1) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக இன்று முதல் சிறப்பு ஆய்வு நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  விளக்கமளித்த தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால,

“செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக வீதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் உள்ளது.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...

தொழில் திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை வாரம் ஆரம்பம்!

ஊழியர்களின் தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு...