உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

Date:

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியது.

இந்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் தலைமையில் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் கூடிய போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி நிறுவனங்களில் குழுக்களை நியமிக்கும் போது சிவில் சமூக பிரதிநிதிகளை அந்தக் குழுக்களின் அங்கத்தவர்களாக நியமிப்பதற்கு தற்போது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை பாதுகாத்து பிரஜைகளின் விரிவான பங்களிப்புடன் கூடிய நிர்வாக முறையை ஸ்தாபித்தல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என அதற்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

அதற்காக முன்னோடி வேலைத்திட்டமொன்று களுத்துறை மாவட்டத்தில் பேருவளை நகர சபையை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் 21 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்தும் முறை தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு மேல்மாகாண உள்ளூர் அதிகாரசபைகள் ஆணையாளருக்கு குழு ஆலோசனை வழங்கியது.

அத்துடன், தற்பொழுது செயலற்றுக் காணப்படும் திறந்த அரசாங்க பங்குடைமை (Open Government Partnership) தொடர்பில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்கவினால் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அதனை மீண்டும் செயற்படுத்தும் நிலைக்கு கொண்டுவருவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனாக மேற்கொள்வதற்குத் தேவையாக கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை கௌரவ உறுப்பினர்களிடமிருந்து பெறுவதற்கும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ஒன்றியத்தினால் மேற்கொள்ள எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்களுக்குத் தேவையான பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்களுடன் மேலும் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...