ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

Date:

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் மதீனாவிலுள்ள அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, மதீனா அல் மகாரியுல் குர்ஆனிய்யா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் சுலைமான் அல்ஜார்-அல்லாஹ் அவர்கள், இலங்கையில் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா திட்டத்தை ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா தமது மேற்பார்வையில் நிறுவி, செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், குர்ஆனுக்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யும் ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ராவின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிர ஈடுபாட்டை அவர் பாராட்டினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...