கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

Date:

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கம்மல்துறை அல்பலாஹ் கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலின் போதே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன்போது கம்பாஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலா பூஷணம் எம்.ஏ.ஏம்.நிலாம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவராக பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஜே. எம். தாஜுதீன் நியமிக்கப்பட்டார்.

செயலாளராக பியாஸ் முகம்மத் மற்றும் பொருளாளராக எம். எம். பௌஸான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம். ஜே. எம். தாஜுதீன்,எம் எப். புஷ்ரா,அஹ்சன் ஆரிப், நாச்சியாதீவு பர்வீன், ஸிராஜ் எம் சாஜகான், முஷாரப் மொஹிதீன், எம். எம். இஸ்மதுல் ரஹ்மான் மற்றும் எஸ்.ஏ. எம். பவாஸ். ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...