இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

Date:

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (01) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான தனது தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச பொருளாதாரத்தை தற்போது பாதிக்கும் நிலைமைகள் மற்றும் இடையூறுகள், தெற்காசியாவில் அவற்றின் தாக்கங்கள் குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.

கலந்துரையாடலின் போது, ​​இந்த உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் சீதாராமனால் ஆற்றப்படும் தலைமைப் பங்கிற்கு மொரகொட தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கும் சாதகமாக பங்களிக்கிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...