சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

Date:

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துணை அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த முடிவை சபாநாயகர் முன்வைத்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால், சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மத்துமபண்டார மேலும் கூறினார்.

இருப்பினும், இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் எதிர்க்கட்சி ஒருபோதும் சபாநாயகரை தோற்கடிக்க முடியாது என்றும் அவர்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...