இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

Date:

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு  ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஆகியவை சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான திரவத்தை அகற்ற இயலாமைக்கு வழிவகுக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என ஆலோசகர் சமூக வைத்தியர் சிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய் இரத்த சிவப்பணு உற்பத்தியையும் சீர்குலைக்கிறது. விட்டமின் D அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் தலையிடுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சிறுநீரகம் தொடர்பான நோய்களின் உலகளாவிய அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம் என மதிப்பிட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டளவில், சிறுநீரக நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...