புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி விதிப்பால் தள்ளுபடி விலையை வழங்குவதில் சிக்கல்!

Date:

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி(VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி விலையை வழங்குவதற்கு பெரும் தடையாக மாறியுள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
2025 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே இலங்கை குறித்த சங்கத்தின் செயலாளர் லசித உமகிலிய இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் கண்காட்சிக்கு வருவோரிடம் நூல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி குறைக்கக் கோரும் பொது மனுவில் கையெழுத்திட அழைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2025 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...