சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Date:

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த சிறுவன் ஹம்தி வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று (23) கொழும்பு நீதிமன்றத்தின் முன் நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஹம்தியின் பெற்றோர், சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு எழுத்துமூல மனுவொன்றையும் கையளித்தனர்.

2022 டிசம்பரில்  இடது பக்க சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் எனக் கூறி, தவறுதலாக வலது பக்க சிறுநீரகத்தையும் அகற்றியதால், மூன்று வயது சிறுவன் ஹம்தி இரு சிறுநீரகங்களையும் இழந்தார்.

இதன் விளைவாக ஹம்தி சுமார் ஆறு மாதங்கள் அவஸ்தைப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சம்பவத்திற்குப் பின்னர் உடனடியாக குடும்பத்துடன் வெளிநாடு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு மாதங்கள் கடந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...