கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

Date:

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்யப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கொலம்பியா அரசு, கடந்த 2024 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்டது. மேலும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வருவதாக கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோவும் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க அதிபர் குஸ்தாவோ நியூயார்க் சென்றுள்ளார்.

ஐ.நா. அவையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகையின்போது, நியூயார்க்கில் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய, ஜனாதிபதி குஸ்தாவோ, காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனவும், அமெரிக்க இராணுவ வீரர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நியூயார்க் தெருவில் நின்று கொண்டு அமெரிக்க வீரர்கள் கட்டளைகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது எனக் கூறி கொலம்பியா ஜனாதிபதி வன்முறையைத் தூண்டியதாகவும், அதனால், அவரது விசாவை ரத்து செய்யப்போவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, கொலம்பியா உள் துறை அமைச்சகம் கூறியதாவது:

“பலஸ்தீனுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையைக் குறித்து ஐ.நா. அவையில் தைரியமாகப் பேசிய சில அதிபர்களில் குஸ்தாவோவும் ஒருவர். அதனால், அவரது விசாவை ரத்து செய்கின்றனர்” எனக் கூறியுள்ளது.

 

Popular

More like this
Related

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...

கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம்...