2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

Date:

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சவூதி விஷன் 2030 திட்டத்தின் கீழ், இந்த சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் தொழில்வாய்ப்புக்காக வந்து பணியாற்றுவோருக்கே இச்சிறப்புத் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதற்கிணங்க,விசா வேறுபாடுகளின்றி இவர்கள் புனித உம்ரா கடமையைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

சகல வகையான விசாக்களை உடையோரும் புனித உம்ரா கடமையை மேற்கொள்ள முடியும் என்பதை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உம்ரா பயணிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதும், இப்புனித கடமைக்காக அதிகபட்ச வசதிகளை வழங்குவதுமே இதன் முக்கிய இலக்காகும்.

தனிப்பட்ட மற்றும் குடும்ப வருகை விசாக்கள், மின்னணு சுற்றுலா விசாக்கள், போக்குவரத்து விசாக்கள், பணி விசாக்கள் மற்றும் பிற வகையான விசாக்கள் உள்ளோரும் இப்புதிய முறையில் புனித உம்ரா கடமையை மேற்கொள்ள முடியும். இதற்காக தனியான விசாக்களைப் பெறுவது அவசியமற்றதாக்கப்பட்டுள்ளது.

உம்ரா செய்ய விரும்புவோர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘நுசுக் உம்ரா’ டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பொருத்தமான தொகுப்பைத் தேர்ந்தெடுத்து, உம்ரா அனுமதிகளை இலத்திரனியல் முறையில் எளிதாகப் பெறலாம்.

இந்த நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சிரமமின்றி புனித யாத்திரையை மேற்கொள்ள, சவூதி அரசு வழங்கும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மின்சார கட்டண திருத்தம்: பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த...

தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா: குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையில் தகவல்

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று பிரபலமாக அறியப்பட்ட...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது...