திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பதவியை வலுப்படுத்தி நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய ஷூரா சபை வேண்டுகோள்

Date:

இலங்கையிலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் உயர்மட்ட அமைப்பான தேசிய ஷூரா சபை (NSC), தற்போது நடைமுறையில் உள்ள திடீர் மரணங்கள் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மரண விசாரணைகளை நீதித்துறைக்கு சுமத்தி, ஏற்கனவே நெருக்கடியான பணிச்சுமையில் உள்ள நீதவான்   நீதிமன்றங்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவேண்டாம் என நீதியமைச்சர் ஹர்ஷ நானாயக்காரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 370(3) இன் கீழ்,  குற்றவியல் உட்பட குற்றம் கவனக்குறைவு பற்றிய நியாயமான சந்தேகம் உள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரம் நீதவான் நீதிமன்றங்களை மரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை தொடர வேண்டும் எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாளின் பணிச்சுமையை நீதவான் நீதிமன்றங்களின் மீது திணிக்க வேண்டாம் என தேசிய ஷூரா சபை தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டத்தை மக்கள் இலகுவானதாகவும், பொதுமக்களுக்கு செலவு குறைந்ததாகவும், நீண்டகால சட்ட தாமதங்களைக் குறைப்பதான நீதி அமைச்சின் முயற்சிகளை வரவேற்பதாக 2025 அக்டோபர் 5ஆம் தேதியிட்ட அமைச்சருக்கான தேசிய ஷூரா சபையின் கடிதம் குறிப்பிடுகிறது.

இருப்பினும், பரிந்துரைக்கப்படவிருக்கும் சில புதிய திட்டங்கள் சட்ட தாமதங்களுக்கு மேலும் வழிவகுக்கும் என்றும், அத்துடன் நீதிமன்றங்கள் மூலமான பிரேத விடுவிப்பு நடைமுறையானது துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

99% திடீர் மரணங்கல் இயல்பான மரணங்களாகவே கடந்தகால புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, சந்தேகிக்குபடும்படியான 1%க்கும் குறைவான மரணங்களின் விதிவிலக்கான வழக்குகளுக்கு மாத்திரமே தேவைப்படும் நீதவான் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைகள்(Post Mortems) இந்த 99% ஆனவர்களும் உட்படுத்தப்படுவது நியாயமற்றது.

மேலும் இவ்வாறான புதிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள இலகுவான நடைமுறைமையை விட  மேலும் கடினமாக்குவதுடன் துயரத்தில் உள்ள குடும்பங்களை மேலும் சிரமம்படுதுகின்றது.

குறிப்பாக முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளில் மேலும் பதிப்படையச்செய்யும் என தேசிய ஷூரா சபை கவலையை தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகள் அரசாங்கத்திற்கு அதிகபட்ச கூடுதல் நிதியைச் செலவழிக்கின்றன, அத்துடன் துயரத்திலுள்ள குடும்பங்களுக்கும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகின்றன.

இறந்த மனித உடல்களுக்கும் சர்வதேச சட்டங்கள் மற்றும் வழக்கமான மத நடைமுறைகளின் கீழ் மரியாதை மற்றும் கண்ணியம் அவசியம்.

எல்லா மதங்களும் இறந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளை வலியுறுத்துகின்றன.

எனவே, அரசாங்கம் நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்தாமல், மாறாக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை தொழிலாளர் பிணக்குகள் சபையின் ஆணையளர்ககுளுக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.

அத்துடன், புதிய நியமனங்களுக்கு நியாயமான ஊதியத்துடன் கூடிய கல்வித் தகமைகளை கொண்டவர்வர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அரசாங்கத்தின் வாக்குறுதிக்கேற்ப, தற்போதுள்ள சட்டங்களில் மாற்றங்கள் சட்ட தாமதங்களைக் குறைத்து, செயல்முறையைச் செலவு குறைந்ததாகவும், திடீர் மரண விசாரணை அதிகாரிகளை அமைப்பை மக்கள் நம்பக்கூடியதாக மாற்ற வேண்டும் என்று தேசிய ஷூரா சபையின் தலைவர் எம்.எம். ஸுஹைர் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பொதுச் செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ் (சட்டத்தரணி) ஆகியோர் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...