ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

Date:

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில் இருந்தவேளை, சியோனிச ஆக்கிரமிப்பு இராணுவம் அபூ ஷஃபான் குடும்பத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அப்பட்டமான படுகொலை, நிராயுதபாணியான பொதுமக்களை திட்டமிட்டு குறிவைக்கும் ஆக்கிரமிப்பு படையின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது.

சமீபத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சியோனிச படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக பாலஸ்தீனப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் கூறியதாவது:

“போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்புப் படை நமது மக்களை மீண்டும் மீண்டும் குறிவைக்கிறது. இது அதன் ஆக்கிரமிப்பு நோக்கங்களையே வெளிப்படுத்துகிறது.”

பாலஸ்தீனப் பிரதிநிதிகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மத்தியஸ்த நாடுகளை இந்த மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நமது மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை நிறுத்த, ஆக்கிரமிப்பு தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...