இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்: தமிமுன் அன்சாரி அறிக்கை

Date:

டிட்வா புயல் மற்றும் இடைவிடா கனமழையால் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பெரும் சேதங்களையும், வெள்ளப் பாதிப்புகளையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணும் போது ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இந்த பேரிடரால் பல குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். வீடுகள், சொத்துகள், வாழ்வாதாரம் ஆகியவை இழந்த மக்களின் துயரத்தை நாங்கள் நெருக்கமாக உணர்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் விரைவாக கிடைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடர் நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தனது பிரார்த்தனைகள், ஆதரவு மற்றும் மனிதநேய ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக அன்சாரி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...