அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இடையில் அனர்த்த உதவித் திட்டம் வழங்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல் இன்று (30) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், பின்வரும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானங்களும் எட்டப்பட்டன.

1) நிவாரணம் தாமதமாக கிடைக்கப் பெற்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு அவற்றை துரிதமாக பெற்றுக் கொடுத்தல்.

2) அனர்த்த நிலைமைகளினால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான கம்பளை, ரம்புக்கல, மூதூர் போன்ற பகுதிகளில் அரசாங்க தரப்புடன் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல்.

3) இன்றிரவும் நாளையும் பெரும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த தகவலை தெரியப்படுத்துவதுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...