அனர்த்த உதவித் திட்டம் தொடர்பிலான ஜம்இய்யதுல் உலமாவின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இடையில் அனர்த்த உதவித் திட்டம் வழங்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல் இன்று (30) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், பின்வரும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானங்களும் எட்டப்பட்டன.

1) நிவாரணம் தாமதமாக கிடைக்கப் பெற்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு அவற்றை துரிதமாக பெற்றுக் கொடுத்தல்.

2) அனர்த்த நிலைமைகளினால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான கம்பளை, ரம்புக்கல, மூதூர் போன்ற பகுதிகளில் அரசாங்க தரப்புடன் இணைந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தல்.

3) இன்றிரவும் நாளையும் பெரும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த தகவலை தெரியப்படுத்துவதுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...