சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலையில் OPD சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு, இன்று (02) நீர் விநியோகமும் மீண்டும் வழங்கப்பட்டதாக சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், பொது சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் சேதமடைந்த வைத்தியசாலையின் மற்ற அனைத்து பிரிவுகளும் படிப்படியாக விரைவாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
