காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

Date:

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள் முழுமையாக விலகவில்லை. துப்பாக்கிச்சூடும், குண்டு வீச்சும் அன்றாட நிகழ்வாகவே தொடர்கின்றன.
 
இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது துருக்கி மற்றும் எகிப்து நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன.
 
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துருக்கி வெளியுறவு மந்திரி ஹக்கன் பிடன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது,
 
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசாவில் தினந்தோறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
 
அமெரிக்கா தலையிடாவிட்டால், இஸ்ரேலின் தினசரி போர் நிறுத்த மீறல்களால், அங்கு அமைதி திட்டத்துக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன் என்றார்.
 

முன்னதாக இஸ்ரேல் மீது எகிப்து வெளியுறவு மந்திரி பதர் அப்தெல்லட்டியும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இஸ்ரேலின் போர் நிறுத்த விதிமீறலை கண்காணிக்க காசா எல்லையில் அமைதிப்படையை நிறுத்த வேண்டும் என அவர் வலியறுத்தினார்.

இந்த கருத்தை துருக்கி வெளியுறவு மந்திரியும் வற்புறுத்தி உள்ளார். இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் தான் மீறுவதாகவும், இதற்கு பதிலடியாகத்தான் இராணுவம் தாக்குதல் தொடுப்பதாகவும் இஸ்ரேல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...