சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

Date:

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது 4,000-க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த தண்டனைச் சட்டக்கோவையின் படி, நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், சிறுவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், பாலியல் தொழிலுக்காகச் சிறுவர்களை வாடகைக்கு எடுத்தல் அல்லது பணியில் அமர்த்துதல், சிறுவர்கள் மீதான கொடூரம், பாலியல் வல்லுறவு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றங்களில் இந்த அதிவேகக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்:ஈரான் முன்வைத்த 10 நிபந்தனைகள்

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும்...

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...