அமெரிக்காவில் கொவிட் மரணங்கள் ஐந்து லட்சத்தை தாண்டியது

Date:

அமெரிக்காவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொவிட்-19 காரணமாக ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆகக் கூடுதலான மரண எண்ணிக்கை இதுவாகும். இன்று காலையில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அமெரிக்க ஜனாதிபதி, கொவிட் மரண எண்ணிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

ஒரு தேசம் என்ற வகையில் எம்மால் தாங்க முடியாத ஒரு கொடுமையாகவே நான் இதைப் பார்க்கிறேன. எமது துயரங்களுக்கு எதிராக நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்கும் நிலையை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி உப ஜனாதிபதி மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் வெள்ளை மாளிகை முன்றலில் கொவிட்டால் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர். அத்தோடு மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இரண்டு கோடி 81 லட்சம் அமெரிக்கர்கள் கொரோணா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம்...

2027ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம்...

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...