இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி M.Pகள் பெற்றுக்கொள்ள போவதில்லை | தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Date:

இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் S.கஜேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில்

இன அழிப்பை நடத்திய இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு உள்ள போதிலும், இராணுவத்திடமிருந்து அதனை பெற்றுக்கொள்வதற்கான எண்ணம் கிடையாது எனவும் S.கஜேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவ வைத்தியசாலைக்கு சென்று கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

இராணுவ வைத்தியசாலைக்கு சென்று, தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் தனக்கு நம்பிக்கை கிடையாது எனவும் அவர் கூறினார்.

அரசாங்க வைத்தியசாலைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், ஏன் இராணுவ வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

கிளிநொச்சியில் தடுப்பூசி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில், மக்களோடு மக்களாக தானும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயார் என எஸ்.ஶ்ரீதரன் தெரிவித்தார்.

வவுனியா கோகுலன்

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...