எகிப்து | 5000 ஆண்டுகள் பழைமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Date:

பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது.

மனித நாகரீகத்தின் ஆதி முதலே கலாசாரத்தின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக மது இருந்து வருகிறது. நம் வரலாற்று நாவல்களிலும் இலக்கியங்களிலும் பலவகை சோம பானங்கள், கள்வகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம்.

தற்போது உலகிலேயே மிகப் பழைமையான மது உற்பத்தி தொழிற்சாலையை எகிப்தில் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் தொல்லியல் மற்றும் சுற்றுலா துறையின் கூற்றுப்படி, இந்த மது தொழிற்சாலை 5000 ஆண்டுகள் பழமையானவை!

இந்த மதுபான தொழிற்சாலை எகிப்தின் கெய்ரோவின் தெற்கில் 280 மைல் தொலைவிலுள்ள நைல் நதியின் மேற்கில் அமைந்துள்ள பாலைவனத்தில் அபிடோஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது கிமு 3100-ம் ஆண்டில் நர்மரின் என்னும் அரசனின் ஆட்சிக்காலத்தில் இருந்திருக்கலாம் என்று தொல்லியல் அமைச்சகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எகிப்து மற்றும் அமெரிக்கா இணைந்து ஆராய்ந்து வரும் தொல்லியல் பணியின் தலைவர்களுள் ஒருவரான, நியூயார்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர்.மாத்திவ் ஆடம்ஸ் இந்த பீர் தொழிற்சாலையை கண்டறிந்துள்ளனர். பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது.

எகிப்தின் தொல்லியல் துறை பொதுச் செயலாளர் டாக்டர் மொஸ்டபா வஜீரி அறிக்கையில்,

“பீர் உற்பத்திக்காக தொழிற்சாலை எட்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் 40 களிமண் பானைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை தானியங்கள் மற்றும் தண்ணீரின் கலவையை சூடேற்றப் பயன்படுத்தப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார். இந்தத் தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 22,400 லிட்டர் பீர் தயாரிக்க முடியும் என்று மாத்திவ் ஆடம்ஸ் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கினால் முடங்கியிருந்த சுற்றுலாத்துறையை புதுப்பித்து வரவிருக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை காட்சிப்படுத்துவதில் சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றனர். எகிப்து மக்களுக்கு பீர் போலவே சுற்றுலாவிலும் போதைதான்!

நன்றி விகடன்

Popular

More like this
Related

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

கம்பளையின் புபுரஸ்ஸ டெல்டாவத்த பகுதியில், மூன்று வயது சிறுமி ஒருவர், தண்ணீர்...

42வது மீலாதுன் நபி தேசிய விழாவை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற “Welcome to Our Mosque” நிகழ்ச்சித்திட்டம்

42ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு, கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பை...