ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே கலந்துரையாடப்பட்ட விடயங்கள்!

Date:

இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) காலை இடம்பெற்றிருந்தது.

மேலும், விவசாயத்துறை சார்ந்த தொழிநுட்ப மற்றும் அறிவுசார் விடயங்களை இரண்டு நாடுகளும் பரிமாற்றிக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுத்தல் மற்றும் நுகர்வோருக்கு மாணிய விலைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொண்டு விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரமானது பாகிஸ்தான் பொருளாதாரத்துடன் ஒத்திருப்பதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே காணப்படும் வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலாத்துறையை அடிப்படையாக கொண்டு இரண்டு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...