பதுளை பகுதியில் தொடர் நிலஅதிர்வுகள் | மக்களுக்கு எச்சரிக்கை

Date:

பதுளை − மடூல்சீமை பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாய நிலைமை காணப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.

மடூல்சீமை − எகிரிய பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்ந்ததை அடுத்தே, பணியகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த பகுதியில் 1.5 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னரும் குறித்த பகுதியில் இருவேறு சந்தர்ப்பங்களில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இந்த நிலஅதிர்வு குறித்து புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அதிகாரிகள் பிரதேசத்திற்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக, குறித்த பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்தே, மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயமும், மண்மேடுகள் சரிவதற்கான அபாயமும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...