பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  ஐந்து இளைஞர்கள் கைது

Date:

வவுனியாவில்  நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட  விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா  பொலிஸாரினால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தமது உடமையில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள்  20, 21, 21, 22, 31 வயதினை உடைய  மகாரம்பைக்குளம், பூந்தோட்டம்,  மதகுவைத்தகுளம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களின் உடமையிலிருந்து 8740 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடமும்  கஞ்சா எப்படி, எங்கிருந்து வந்ததென விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணையின் பின்னர் ஐவரையும் நீதிமன்றில்  முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .
வவுனியா நிருபர்

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...